Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டியில் கடனுதவி

சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டியில் கடனுதவி

சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டியில் கடனுதவி

சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டியில் கடனுதவி

ADDED : ஜூன் 04, 2025 01:30 AM


Google News
கள்ளக்குறிச்சி : சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு, சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.

தனிநபர், சுய உதவி குழு சிறுதொழில், கைவினை கலைஞர்களுக்கான கடன், மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம், சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், கடன் வழங்கப்படுகிறது.

மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவியர் அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயின்றால், அதிக பட்சமாக ரூ.30 லட்சம் வரை கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us