Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஊரக வளர்ச்சி துறை இளநிலை உதவியாளர்களுக்கு பணி ஆணை

ஊரக வளர்ச்சி துறை இளநிலை உதவியாளர்களுக்கு பணி ஆணை

ஊரக வளர்ச்சி துறை இளநிலை உதவியாளர்களுக்கு பணி ஆணை

ஊரக வளர்ச்சி துறை இளநிலை உதவியாளர்களுக்கு பணி ஆணை

ADDED : மார் 18, 2025 04:22 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஊரக வளர்ச்சித் துறையில் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் இளநிலை உதவியாளர்களான ஒதுக்கீடு செய்யப்பட்ட 14 பேருக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் கூட்டரங்கில் கலெக்டர் பிரசாந்த் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகளைப் பெற்றவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உளுந்துார்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம், கல்வராயன்மலை, திருநாவலுார், தியாகதுருகம், திருக்கோவிலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், உதவி இயக்குநர் (தணிக்கை) உள்ளிட்ட பல்வேறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகங்களில் பணிபுரிய உள்ளனர்.

பணிநியமன ஆணைகளைப் பெற்ற அனைவரும் அரசு பணியில் சிறப்பாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணி புரிவதுடன் பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் பணிகளை கையாள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us