/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பஸ் கண்ணாடிகள் உடைத்த கண்டக்டர் மீது விசாரணை பஸ் கண்ணாடிகள் உடைத்த கண்டக்டர் மீது விசாரணை
பஸ் கண்ணாடிகள் உடைத்த கண்டக்டர் மீது விசாரணை
பஸ் கண்ணாடிகள் உடைத்த கண்டக்டர் மீது விசாரணை
பஸ் கண்ணாடிகள் உடைத்த கண்டக்டர் மீது விசாரணை
ADDED : ஜூன் 01, 2025 12:15 AM
திருக்கோவிலுார்:மணம்பூண்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் கண்ணாடிகளை உடைத்த கண்டக்டர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மணம்பூண்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் திருக்கோவிலூர் - சென்னை வழித்தடத்தில் கண்டக்டராக பணியாற்றுபவர் சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கார்த்திகேயன், 32; இவர் நேற்று மாலை 3:30 மணிக்கு, குடிபோதையில் பணிமனை வளாகத்தில் இருந்த இரண்டு பஸ்களின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இது குறித்து கேட்ட பணிமனை மேலாளர் நாராயணமூர்த்தியை மிரட்டினார்.
இது குறித்த புகாரின் பேரில், அரகண்டநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.