/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/எஸ்.பி., தலைமையில் குறைதீர் கூட்டம்: 8 மனுக்களுக்கு தீர்வுஎஸ்.பி., தலைமையில் குறைதீர் கூட்டம்: 8 மனுக்களுக்கு தீர்வு
எஸ்.பி., தலைமையில் குறைதீர் கூட்டம்: 8 மனுக்களுக்கு தீர்வு
எஸ்.பி., தலைமையில் குறைதீர் கூட்டம்: 8 மனுக்களுக்கு தீர்வு
எஸ்.பி., தலைமையில் குறைதீர் கூட்டம்: 8 மனுக்களுக்கு தீர்வு
ADDED : ஜன 25, 2024 04:25 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், 8 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு எஸ்.பி., சமய்சிங்மீனா தாலைமை தாங்கி, மனுக்களை பெற்றார். இதில் போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கையில் திருப்தி பெறாத புகார்தாரர்கள் குறை தீர்வு கூட்டத்தில் பங்கேற்று மனு அளித்தனர்.
அதில் 10 மனுக்கள் பெறப்பட்டு 8 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.
நிலுவையில் உள்ள 2 மனுதாரரின் குறைகளை கேட்டறிந்து, அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து புதியதாக 33 புகார் மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்தில் டி.எஸ்.பி.,க்கள் ரமேஷ், குகன், மனோஜ்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் உட்பட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.