ADDED : மார் 19, 2025 05:32 AM

திருக்கோவிலுார்,: அரகண்டநல்லூர், வள்ளியம்மை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,6 வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தலைவர் பூபதி தலைமை தாங்கினார். முதல்வர் தென்னரசி வரவேற்றார்.
சென்னை ஜெயின் பீட்டர்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 510 மாணவியருக்கு, பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார். சென்னை மாநிலக் கல்லூரி இயற்பியல் துறை இணை பேராசிரியர் சீனிவாசன், ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.