ADDED : ஜூன் 27, 2025 12:18 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில், அனைத்து துறை அரசு அலுவலர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், எம்.பி.,க்கள் மலையரசன், ரவிக்குமார், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல, மாவட்ட காவல் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.