Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி கைது

தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி கைது

தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி கைது

தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி கைது

ADDED : மார் 22, 2025 04:03 AM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே தப்பி ஓடிய கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் - விழுப்புரம் மெயின் ரோட்டில், அரகண்டநல்லுார், வீர அய்யனார் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த, 9ம் தேதி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் கஞ்சா விற்ற மகாலிங்கம் மகன் நாராயணன், 28; ஸ்டீபன் மகன் மகிமை ராஜ், 19; தீர்த்தமலை மகன் அமல்ராஜ், 25; ஆகியோரை கைது செய்தனர்.

அப்போது அங்கிருந்து, ஏழுமலை மகன் பிரபாகரன், 25; தப்பி ஓடி விட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து, மூவரை சிறையில் அடைத்த போலீசார், தப்பி ஓடியவரை தேடி வந்தனர். அவர் பெங்களூருவில் பதுங்கி இருந்த நிலையில், நேற்று போலீசார் அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us