ADDED : மே 16, 2025 12:07 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த மட்டிகைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் மகள் கோபிகாஸ்ரீ,17; இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அவரை கடந்த, 12ம் தேதி தாய் வளர்மதி பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனைக்குள் சென்ற வளர்மதி, சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது கோபிகாஸ்ரீ இல்லாததால் அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து, பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், தந்தை தனசேகர் போலீசில் புகார் அளித்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.