Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விவசாயிகள் கருத்தரங்கம்

விவசாயிகள் கருத்தரங்கம்

விவசாயிகள் கருத்தரங்கம்

விவசாயிகள் கருத்தரங்கம்

ADDED : செப் 30, 2025 08:08 AM


Google News
கள்ளக்குறிச்சி : அரசம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் கருத்தரங்கம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாவட்ட இப்கோ கள அலுவலர் ஹரிஷ்கவுதம் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில், கூட்டுறவு கடன் சங்கம் குறித்தும், கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள், பயிர் காப்பீடு திட்டம், நகைக்கடன், உழவர் மானிய திட்டம், டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் பற்றி விரிவாக எடுத்துரைக்கப் பட்டது.

செயற்கை உரங்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதற்கு மாறாக இப்கோ தயாரிப்புகளான நானோ யூரியா, நானோ பொட்டாஷ் மற்றும் நானோ டி.ஏ.பி., பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், லாபம் குறித்தும் கூறப்பட்டது. கூட்டத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us