ADDED : செப் 02, 2025 09:53 PM
கச்சிராயபாளையம்; தெங்கியாநத்தம் கிராமத்தில் தவறி விழுந்த மூதாட்டி இறந்தார்.
கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி மல்லிகா, 70; இவர் ஒராண்டாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டு வாசலில் கீழே விழுந்து மயங்கினார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10 மணிக்கு மல்லிகா இறந்தார். இது குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .