Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மயங்கி விழுந்த முதியவர் பலி

மயங்கி விழுந்த முதியவர் பலி

மயங்கி விழுந்த முதியவர் பலி

மயங்கி விழுந்த முதியவர் பலி

ADDED : செப் 01, 2025 01:19 AM


Google News
கள்ளக்குறிச்சி : நின்னையூரில் மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்,78; இவர் கடந்த 21ம் தேதி விளைநிலத்தில் மக்காச்சோளம் அறுவடை பணியில் இருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

உடன் அவரது குடும்பத்தினர் ராமலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us