/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மொபைல் நெட்வொர்க் பிரச்னையால் டாக்டர்கள், நோயாளிகள் அவதி! அரசு மருத்துவமனையில் 'டவர்' அமைக்க கோரிக்கைமொபைல் நெட்வொர்க் பிரச்னையால் டாக்டர்கள், நோயாளிகள் அவதி! அரசு மருத்துவமனையில் 'டவர்' அமைக்க கோரிக்கை
மொபைல் நெட்வொர்க் பிரச்னையால் டாக்டர்கள், நோயாளிகள் அவதி! அரசு மருத்துவமனையில் 'டவர்' அமைக்க கோரிக்கை
மொபைல் நெட்வொர்க் பிரச்னையால் டாக்டர்கள், நோயாளிகள் அவதி! அரசு மருத்துவமனையில் 'டவர்' அமைக்க கோரிக்கை
மொபைல் நெட்வொர்க் பிரச்னையால் டாக்டர்கள், நோயாளிகள் அவதி! அரசு மருத்துவமனையில் 'டவர்' அமைக்க கோரிக்கை

பாதிப்பு
இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள், அவசர நேரங்களில் கூட அவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. சில நேரங்களில் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு டாக்டர்கள் கூட ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. கட்டடத்தின் ஜன்னல் ஓரங்களில் சென்றால் மட்டுமே பேசக்கூடிய நிலை உள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அரசுத்துறை உயர் அதிகாரிகள், டாக்டர்களிடம் உடனுக்குடன் தகவல்களை கேட்டறிய முடியாத நிலை நீடிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மருத்துவமனை கட்டடத்திற்குள் தங்கு தடையின்றி மொபைல் நெட்வொர்க் கிடைக்கும் வகையில் அப்பகுதியில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில் அல்லது தனியார் நிறுவனத்தின் 'மொபைல் டவர்கள்' அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.