Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ லாரியில் டீசல் திருட்டு

லாரியில் டீசல் திருட்டு

லாரியில் டீசல் திருட்டு

லாரியில் டீசல் திருட்டு

ADDED : மே 26, 2025 11:49 PM


Google News
கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே சாலையோரமாக நின்றிருந்த லாரியில் டீசல் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த கிழக்கு கந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா, 57; டிரைவர். இவர் கடந்த 22ம் தேதி இரவு புதுச்சேரியில் இருந்து, டாரஸ் லாரியில் குளோரின் சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி வழியாக காங்கேயம் நோக்கி சென்றார். 23ம் தேதி நள்ளிரவு 1:00 மணியளவில் மாடூர் டோல்கேட் அருகே சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு ராஜா துாங்கினார்.

அதிகாலை 3 மணியளவில் எழுந்து பார்த்த போது, லாரியில் இருந்த 270 லிட்., டீசலை மர்மநபர்கள் திருடியது தெரிந்தது. இது குறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us