Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கல்வராயன்மலை பகுதியில் 600 லிட்டர் ஊறல் அழிப்பு

கல்வராயன்மலை பகுதியில் 600 லிட்டர் ஊறல் அழிப்பு

கல்வராயன்மலை பகுதியில் 600 லிட்டர் ஊறல் அழிப்பு

கல்வராயன்மலை பகுதியில் 600 லிட்டர் ஊறல் அழிப்பு

ADDED : பிப் 24, 2024 06:08 AM


Google News
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலைப் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

கல்வராயன்மலை பகுதியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்.பி., சமய்சிங் மீனா உத்தரவின் பேரில் கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், மலைப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் தொட்டித்துறை காடு ஓடையின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு சாராய ஊறல்கள் போடப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து 3 பேரல்களில் இருந்து 600 லிட்டர் சாராய ஊறல்களை அங்கேயே கொட்டி அழித்தனர்.

இது தொடர்பாக கரியாலுார் போலீசார் வழக்குப்பதிந்து கள்ளச்சாராய வியாபாரியை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us