Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சியில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

ADDED : பிப் 09, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மா.கம்யூ., சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். வேலாயுதம், மாரிமுத்து, சிவாஜி, அண்ணாமலை முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், ஏழுமலை, சுப்ரமணியன், பூவராகவன், சாமிநாதன், செந்தில், ஏழுமலை, அலமேலு, பழனி மற்றும் தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

இதில், மாநில உரிமைகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் மத்திய பா.ஜ., அரசை கண்டிப்பது, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், டில்லி உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுவதை கண்டிப்பது, சட்டசபைகளில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர்கள் ஒப்புதல் கொடுக்க மறுப்பதை கண்டித்து பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us