Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மகள், பேரன் மாயம்; பாட்டி போலீசில் புகார்

மகள், பேரன் மாயம்; பாட்டி போலீசில் புகார்

மகள், பேரன் மாயம்; பாட்டி போலீசில் புகார்

மகள், பேரன் மாயம்; பாட்டி போலீசில் புகார்

ADDED : செப் 02, 2025 09:52 PM


Google News
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் ஒரு வயது குழந்தையுடன் மாயமான தாய் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துாரை சேர்ந்தவர் மதியழகன. அவரது மனைவி அபிநயா, 21; இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஆக., 2ம் தேதி அபிநயா, தனது ஒரு வயது மகனுடன் மருத்துவமனைக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.

நீண்ட நேரமாகியும் அபிநயா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.

எங்கும் கிடைக்காததால், மாயமான தனது மகள் அபிநயா மற்றும் 1 வயது பேரனை கண்டுபிடித்து தரக்கோரி, அபிநயாவின் தாய் சரசு போலீசில் புகார் அளித்தார்.

கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us