Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குடிநீர் டேங்க் சேதம்: போலீஸ் விசாரணை

குடிநீர் டேங்க் சேதம்: போலீஸ் விசாரணை

குடிநீர் டேங்க் சேதம்: போலீஸ் விசாரணை

குடிநீர் டேங்க் சேதம்: போலீஸ் விசாரணை

ADDED : மே 21, 2025 12:16 AM


Google News
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே, குடிநீர் 'மினி' டேங்க்கை சேதப்படுத்தியவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த தேவியகரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மினி டேங்க்கை, அதே பகுதியை சேர்ந்த ராஜாராமன் மகன் திருமூர்த்தி, 29; குடிபோதையில், இரும்பு கம்பியால் உடைத்து சேதப்படுத்தினார். இந்த காட்சி, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து ஊராட்சி தலைவர் கலையரசி கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us