ADDED : ஜூன் 06, 2025 08:36 AM

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அருகே திருட்டில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
அரகண்டநல்லுார் அடுத்த வடகரைதாழனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சரவணன், 37; இவரது வீட்டில் கடந்த 2ம் தேதி, 10 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருடு போனது.
அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதே ஊரை சேர்ந்த காமராஜ், 51; அவரது மனைவி ராஜேஸ்வரி, 48; ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இருவரும் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். மேலும் திருவெண்ணைநல்லுாரில் இரு இடங்களில் வீடு புகுந்து நகைகளை திருடியதும் கண்டறியப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 17 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.