Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 28, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தெய்வீகன் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ரேஷன் கடையில் 'புளூடூத்' மூலம் மின்னணு, எடை தராசு இணைக்கப்பட்டதால் ஒரு நாளுக்கு, 50 பேருக்கு மேல் பொருட்கள் விநியோகிக்க முடியாமல் உள்ளதை சரிசெய்ய வேண்டும்; அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை செய்வதை உறுதிபடுத்துதல்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்ட பொருளாளர் தெய்வீகன், துணைத்தலைவர்கள் ரமேஷ், கந்தசாமி, ராகவேந்திரன், முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us