Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தனியார் வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அழைப்பு

தனியார் வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அழைப்பு

தனியார் வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அழைப்பு

தனியார் வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அழைப்பு

ADDED : மார் 19, 2025 05:35 AM


Google News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நாளை மறுதினம் நடக்கும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க, கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுதினம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

இதில் வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு, சில்லறை விற்பனை துறையை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணியாட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாவட்டத்தில், 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., முடித்த ஆண்கள், பெண்கள் பங்கேற்று பயனடையலாம்.

விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண் டும். தனியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us