Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குழந்தை தொழிலாளர் மீட்பு

குழந்தை தொழிலாளர் மீட்பு

குழந்தை தொழிலாளர் மீட்பு

குழந்தை தொழிலாளர் மீட்பு

ADDED : ஜூன் 25, 2025 08:19 AM


Google News
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஒன்றியத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்து தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் வேலுமணி தலைமையில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன், வருவாய் ஆய்வாளர் அருள் பிரகாசம், வி.ஏ.ஓ., வினோத்குமார், சப் இன்ஸ்பெக்டர் அன்வர் பாஷா ஆகியோர் வணிக வளாகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் நான்கு குழந்தைகள் கண்டறியப்பட்டு மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆய்வின் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மணி, ஆற்றுப்படுத்துநர் பூபாலன் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us