Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சென்னை இன்ஜினியரிடம் உ.பேட்டையில் வழிப்பறி

சென்னை இன்ஜினியரிடம் உ.பேட்டையில் வழிப்பறி

சென்னை இன்ஜினியரிடம் உ.பேட்டையில் வழிப்பறி

சென்னை இன்ஜினியரிடம் உ.பேட்டையில் வழிப்பறி

ADDED : மார் 16, 2025 01:22 AM


Google News
உளுந்துார்பேட்டை, :நள்ளிரவில் தனியார் நிறுவன பொறியாளரை தாக்கி நகை, மொபைல்போன், லேப்டாப், பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் வினோத், 29; சென்னை, போரூரில் தனியார் நிறுவன பொறியாளர். 12ம் தேதி நண்பரின் திருமணத்திற்கு கோவை சென்றார். பின், நேற்று முன்தினம் இரவு, அங்கிருந்து சென்னைக்கு பைக்கில் புறப்பட்டார்.

நேற்று அதிகாலை, 1:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த ஒலையனுார் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, இயற்கை உபாதைக்காக பைக்கை சாலையோரம் நிறுத்தினார்.

அப்போது, அங்கு ஒரே பைக்கில் வந்த நான்கு நபர்கள், வினோத்தை மிரட்டி தாக்கினர். அவரிடம் இருந்த, 1 சவரன் செயின், லேப்டாப், ஐபோன், 2,000 ரூபாய், ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்டவற்றை பறித்து தப்பினர்.

அதிர்ச்சியடைந்த அவர், அருகே உள்ள டீக்கடையில் இருந்தவர்களிடம் மொபைல் போன் வாங்கி, உளுந்துார்பேட்டை போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us