/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வழி தொடர்பான தகராறு 2 பேர் மீது வழக்கு வழி தொடர்பான தகராறு 2 பேர் மீது வழக்கு
வழி தொடர்பான தகராறு 2 பேர் மீது வழக்கு
வழி தொடர்பான தகராறு 2 பேர் மீது வழக்கு
வழி தொடர்பான தகராறு 2 பேர் மீது வழக்கு
ADDED : மார் 21, 2025 07:01 AM
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே நிலத்திற்கு செல்லும் வழி தொடர்பான தகராறில் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த சூளாங்குறிச்சி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன், 59; இவரது நிலத்திற்கு அருகே ஜெகதீசன், 66; என்பவரது நிலம் உள்ளது. நிலத்திற்கு செல்லும் வழி தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. கடந்த 17ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து இரு தரப்பிலும் அளித்த புகாரின் பேரில் ஜெயராமன், ஜெகதீசன் ஆகியோர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.