Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ரூ.3.58 கோடியில் பாலம் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.3.58 கோடியில் பாலம் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.3.58 கோடியில் பாலம் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.3.58 கோடியில் பாலம் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ADDED : பிப் 29, 2024 10:49 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி - அழகாபுரம் - சோழம்பட்டு முக்தா ஆற்றின் குறுக்கே ரூ.3.58 கோடி மதிப்பிலான உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த அழகாபுரம் - சோழம்பட்டு இடையே உள்ள முக்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் 3 கோடியே 58 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. உதயசூரியன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

ஒன்றிய சேர்மன்கள் அலமேலுஆறுமுகம், திலகவதி நாகராஜன், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் கமரூதீன், சங்கராபுரம் நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை, இளைஞரணி துணை அமைப்பாளர் அருள், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ராமர் உட்பட பலர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us