Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ டிராக்டர் மோதி சிறுவர்கள் காயம்

டிராக்டர் மோதி சிறுவர்கள் காயம்

டிராக்டர் மோதி சிறுவர்கள் காயம்

டிராக்டர் மோதி சிறுவர்கள் காயம்

ADDED : செப் 01, 2025 11:42 PM


Google News
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் அசோக், 23; நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, டிராக்டரை மாரியம்மன் கோவில் தெரு வழியாக அதிவேகமாக ஓட்டிச் சென்றார். கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் செல்வராஜ் மகன் சுந்தரவேல், 35; என்பவரது வீட்டு படிக்கட்டின் மீது மோதி ஷட்டர் உடைத்துக் கொண்டு நின்றது.

இதில் வீட்டின் முன் பக்கம் அமர்ந்திருந்த சுந்தரவேல் மகன் குமரன், 8; மற்றொரு சிறுவனான மணிகண்டன் மகன் வெற்றிவேல், 8; மீதும் டிராக்டர் மோதி பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து சுந்தரவேல் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் டிராக்டர் ஒட்டி விபத்து ஏற்படுத்திய அசோக் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us