Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

ADDED : மார் 15, 2025 08:19 PM


Google News
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுாரில் மின்சாரம் தாக்கி பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரகண்டநல்லுார், கொட்டாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் மகன் வெங்கடேசன், 15; பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ராஜாராம் உடல்நிலை பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாய் இந்திராணி மருத்துவமனையில் துணைக்கு இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு வெங்கடேசன் தனது வீட்டில் ஜங்ஷன் பாக்சை பிரித்து ரிப்பேர் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த தங்கை மங்கையர்க்கரசி, 11; கூச்சலிட்டார். உடன் அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us