Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

ADDED : ஜூன் 28, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மணிகண்டன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மனநல டாக்டர் பிரவீனா பங்கேற்று, போதைப்பொருட்கள் பயன்பாடு, சமூகத்தில் போதைப்பொருள் நுகர்வாளர்களின் நிலை, புகைப்பழக்கத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விளக்கி பேசினார்.

தொடர்ந்து, போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமும் நடந்தது. கருத்தரங்கில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us