Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அனுமதியற்ற மனைப்பிரிவில் தனி மனை பதிவு வரன்முறை செய்து கொள்ள விண்ணப்பம் வரவேற்பு

அனுமதியற்ற மனைப்பிரிவில் தனி மனை பதிவு வரன்முறை செய்து கொள்ள விண்ணப்பம் வரவேற்பு

அனுமதியற்ற மனைப்பிரிவில் தனி மனை பதிவு வரன்முறை செய்து கொள்ள விண்ணப்பம் வரவேற்பு

அனுமதியற்ற மனைப்பிரிவில் தனி மனை பதிவு வரன்முறை செய்து கொள்ள விண்ணப்பம் வரவேற்பு

ADDED : ஜூலை 01, 2025 07:01 AM


Google News
கள்ளக்குறிச்சி : அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் பதிவு செய்த தனி மனைகள் வரன்முறை செய்து கொள்ள விண்ணப்பம் அளித்து பதிவு செய்யலாம்.

கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:

சட்டசபை மானிய கோரிக்கையின்போது, கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதிக்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் முன்பதிவு செய்த தனி மனைகளுக்கு எவ்வித காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அறிவித்தார்.

அவ்வாறு தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெற இன்று 1ம் தேதி முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

மேலும், அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன் அமைத்த மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, அரசாணையில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்குட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் 2026ம் ஆண்டு ஜூன் 30 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்று 1ம் தேதி முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

அதேபோல் மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படா மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக இன்று 1ம் தேதி முதல் வரும் நவம்பர் 30ம் தேதி வரை www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us