Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு 'ஏசி' மற்றும் எஸ்.இ.டி.சி., சொகுசு பஸ்களில் கள்ளக்குறிச்சிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பு

அரசு 'ஏசி' மற்றும் எஸ்.இ.டி.சி., சொகுசு பஸ்களில் கள்ளக்குறிச்சிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பு

அரசு 'ஏசி' மற்றும் எஸ்.இ.டி.சி., சொகுசு பஸ்களில் கள்ளக்குறிச்சிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பு

அரசு 'ஏசி' மற்றும் எஸ்.இ.டி.சி., சொகுசு பஸ்களில் கள்ளக்குறிச்சிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பு

ADDED : மே 20, 2025 10:39 AM


Google News
சென்னை - சேலம், கோயம்புத்துார் மார்க்கமாக செல்லும் அரசு 'ஏசி' மற்றும் எஸ்.இ.டி.சி., ஸ்லீப்பர் கோச் பஸ்களில், கள்ளக்குறிச்சியில் இறங்கும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் சென்னை, சேலம், கோயம்புத்துார், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் தங்கி பணிபுரிகின்றனர்.

வெளி மாவட்ட கல்லுாரி விடுதிகளிலும் தங்கி மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் விடுமுறை நாட்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் சொந்த ஊருக்கு வருகின்றனர். சாதாரண பஸ்கள் வழித்தடத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று, அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்குவதால், நீண்ட துாரம் பயணிப்பவர்கள் சிரமமடைகின்றனர்.

இதனால், நீண்ட துாரம் பயணிப்பவர்கள், அவசர பணிக்காக செல்பவர்கள், முதுகுவலி உள்ளவர்கள், முதியவர்கள் அரசு 'ஏசி' மற்றும் 'ஸ்லீப்பர் கோச்'(எஸ்.இ.டி.சி) அரசு பஸ்களை நாடுகின்றனர்.

இந்நிலையில், அந்த பஸ்களின் கண்டக்டர்கள் கள்ளக்குறிச்சி நகருக்குள் செல்லாது, புறவழிச்சாலை அல்லது டோல்கேட்டில் பயணிகளை இறக்கி விடுகின்றனர்.

ஆனால், சென்னை மார்க்கத்திலிருந்து வருபவர்களுக்கு ஆத்துார் வரையிலான கட்டணமும், சேலம் மார்க்கத்திலிருந்து வருபவர்களுக்கு உளுந்துார்பேட்டை வரையிலான கட்டணத்தையும் வசூலிக்கின்றனர்.

எனவே, சென்னை - சேலம், கோயம்புத்துார் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு 'ஏசி' மற்றும் எஸ்.இ.டி.சி., ஸ்லீப்பர் கோச் பஸ்களை இரவு நேரங்களில் கள்ளக்குறிச்சிக்கு முறையான கட்டணத்தை நிர்ணயித்து நகர் பகுதி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us