Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ADDED : ஜூன் 06, 2025 08:35 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில், பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் வருகைக்கேற்ப போதிய இட வசதி இல்லாததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறுகிய இடமாக இருந்ததால் பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களும் நிற்கமுடியாத நிலை உண்டானது.

மேலும், பஸ் நிலையத்திற்கு உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழிகள் வரை பஸ்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக மாறியது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒன்றரை ஏக்கருக்கும் மேலான இடவசதியுடன் கூடிய வகையில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

பஸ் நிலையத்தில் தரைத்தளம் மற்றும் பஸ்கள் நிற்பதற்கென தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் சென்னை, திருக்கோவிலுார், திருவண்ணாமலை என பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ்களுக்கான தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்


இந்நிலையில் தற்போது அந்த இடத்தில், பஸ்கள் நிறுத்தப்படாமல், சற்று முன்பாகவே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.

அதேபோல சேலம் மார்க்கம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துமிடம், நுழைவு வாயிலை ஒட்டியவாறு இருப்பதால், வாகனங்கள் அணிவகுத்து அவ்வப்போது பஸ்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால், பஸ் நிலையத்தில், இட நெருக்கடி ஏற்படுவதுடன் நுழைவு வாயில் பகுதியில் வெளிப்புறம் சாலையிலும் பஸ்கள் அணிவகுத்து நிற்கின்றன.

மேலும், தடுப்பு கட்டைகளில் பஸ்கள் நிறுத்தப்படாததும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மாணவர்கள் அவதி


தற்போது பஸ் நிற்கும் இடங்கள் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளன. இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு ஊர்களுக்கு செல்லுக்கூடிய நுாற்றுக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்று திரும்பும் கூலி தொழிலாளர்கள் பலர் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இடநெருக்கடியால் அவ்வப்போது பயணிகள் மீது அடிக்கடி பஸ் மோதி விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த பிரச்னையால் விபத்து ஏற்பட்டு, சிலர் இறந்து போன சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அதனால், பஸ் நிலையத்தில் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டு பஸ்கள் அனைத்தும் அதற்கான உரிய இடத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us