Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பயனாளிகள் 3.99 லட்சம்: டோக்கன் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது

 மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பயனாளிகள் 3.99 லட்சம்: டோக்கன் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது

 மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பயனாளிகள் 3.99 லட்சம்: டோக்கன் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது

 மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பயனாளிகள் 3.99 லட்சம்: டோக்கன் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது

ADDED : ஜன 08, 2024 06:14 AM


Google News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 940 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது.

தமிழக மக்கள், தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன், 1,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழக அரசு மூலம் மகளிர் உரிமைத் தொகை பெற யார் தகுதியானவர்கள் என்பதற்கு விதிக்கப்பட்ட தகுதிகள் போன்று 1000 ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கும் இந்த ஆண்டு அரசு புதியதாக ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி மத்திய, மாநில அரசு ஊழியர்கள், சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து மற்ற கார்டுதாரர்களுக்கு மட்டுமே 1000 ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு பொருட்கள் பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 598 முழு நேரம், 168 பகுதி நேரம் என மொத்தமாக 766 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், 4 லட்சத்து 33 ஆயிரத்து 900 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு விலையில்லா அரிசி, மலிவு விலையில் பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் தகுதியின் அடிப்படையில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 940 பயனாளிகளுக்கு மட்டுமே நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதி வாய்ந்த நபர்களின் பெயர், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பட்டியல், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அந்தந்த பகுதி ரேஷன் கடைகளுக்கு நேற்று அனுப்பி அவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் பெற டோக்கன் வழங்கும் பணி நேற்று துவங்கியது.

டோக்கனில் பயனாளியின் பெயர், கடை எண், தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை 8ம் தேதி வரை டோக்கன் வழங்கும் பணி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 9ம் தேதி முதல் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us