Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குறைகேட்பு கூட்டத்தில் 458 கோரிக்கை மனுக்கள்

குறைகேட்பு கூட்டத்தில் 458 கோரிக்கை மனுக்கள்

குறைகேட்பு கூட்டத்தில் 458 கோரிக்கை மனுக்கள்

குறைகேட்பு கூட்டத்தில் 458 கோரிக்கை மனுக்கள்

ADDED : செப் 30, 2025 08:06 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 458 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில், வருவாய் துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர், சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 458 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

முன்னதாக நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் செயற்கை கால் வேண்டி விண்ணப்பித்த மாற்றத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அதிநவீன செயற்கை கால் அளவிடுதல் பணிகள் மேற்கொண்டு 4 பேருக்கு ரூ.3 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சமுக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us