Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/டாஸ்மாக் கடையில் திருட முயன்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது

டாஸ்மாக் கடையில் திருட முயன்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது

டாஸ்மாக் கடையில் திருட முயன்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது

டாஸ்மாக் கடையில் திருட முயன்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது

ADDED : ஜன 05, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
ரிஷிவந்தியம் : டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் - பெரியக்கொள்ளியூரில் டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த டிச., 13ம் தேதி இரவு மேற்பார்வையாளர் சண்முகம், விற்பனையாளர் கோவிந்தராஜ் ஆகியோர் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றனர்.

அன்றிரவு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் இரும்பு கதவை உடைத்து திருட முயன்று, கடையின் பூட்டை உடைக்க முடியாததால் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.பி., சமயசிங் மீனா உத்தரவின் பேரில் திருக்கோவிலுார் டி.எஸ்.பி., மனோஜ்குமார் மேற்பார்வையில் உட்கோட்ட குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், பகண்டை கூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கிடைத்த தகவலின்பேரில் தும்பை கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மகன் விக்னேஷ்குமார்,24; புதுபாலப்பட்டு ஏழுமலை மகன் தேவேந்திரன்,19; ஆறுமுகம் மகன் கவுரிசங்கர்,21; மற்றும் 16 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட முயன்றதும், மணலுார்பேட்டை, சங்கராபுரம், கச்சிராயபாளையம் பகுதிகளில் 4 பைக்குகளை திருடியதும் தெரிய வந்தது.

பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற மூவரை சிறையிலும் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us