Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 372 கோரிக்கை மனுக்கள்

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 372 கோரிக்கை மனுக்கள்

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 372 கோரிக்கை மனுக்கள்

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 372 கோரிக்கை மனுக்கள்

ADDED : செப் 23, 2025 09:26 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 372 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில், வருவாய் துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர், சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைபட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 372 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி உட்பட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us