Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பூட்டிய வீட்டில் 10 சவரன் திருட்டு

பூட்டிய வீட்டில் 10 சவரன் திருட்டு

பூட்டிய வீட்டில் 10 சவரன் திருட்டு

பூட்டிய வீட்டில் 10 சவரன் திருட்டு

ADDED : ஜூன் 06, 2025 07:38 AM


Google News
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அருகே வீட்டின் பூட்டை திறந்து 10 சவரன் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரகண்டநல்லுார் அடுத்த வடகரைதாழனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சரவணன், 37; கூலித்தொழிலாளி. கடந்த 2ம் தேதி குடும்பத்துடன் வேலைக்கு சென்று மாலை 3:00 மணிக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த 10 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us