Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

ADDED : ஜூன் 26, 2024 02:26 AM


Google News
கள்ளக்குறிச்சி, : குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் ஆனந்தன்,36; இவர் கடந்த 24ம் தேதி இரவு 10 மணியளவில் மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி ரம்யா கண்டித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

கோபமடைந்த ரம்யா தனது இரு குழந்தைகளுடன் ஹாலில் துாங்கியுள்ளார். ஆனந்தன் மட்டும் அறையில் தனியாக உறங்கியுள்ளார்.

தொடர்ந்து, நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, அறையில் இருந்த மின்விசிறியில் ஆனந்தன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us