ADDED : ஜூன் 03, 2024 06:03 AM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிமீறிய 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
இதில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக வாகனம் ஓட்டியது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது, வாகனத்தில் 3 பேர் அமர்ந்து சென்ற 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.