Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வன பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வன பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வன பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வன பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ADDED : ஜூலை 14, 2024 11:33 PM


Google News
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவளுரில் 23 அடி உயர வன பத்ரகாளி அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.

விழா, கடந்த 12ம் தேதி காலை 9:00 மணியளவில் மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

கும்பாபிேஷக தினமான நேற்று, காலை 8:00 மணியளவில் மூன்றாம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து, புதிய சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்து நவாவரண பூஜை பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.

மதியம் 12:00 மணியளவில் கடம் புறப்பட்டாகி 23 அடி உயர மகா ஸ்ரீ வன பத்ரகாளி அம்மன் சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள மகா கணபதி. ஈஸ்வரன், வராகி அம்மன் , பிரத்யங்கிரா தேவி, நாகாத்தம்மன், காலபைரவர், கருமாரியம்மன் உள்ளிட்ட சிலைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஷில்பா தேவி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us