ADDED : ஜூலை 04, 2024 03:17 AM
கள்ளக்குறிச்சி : தச்சூரில் இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் நாட்டு வெல்லம் தயார் செய்யும் ஆலை அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நேரில் சென்று உடலைக் கைப்பற்றி இறந்தவர் யார் என்பது குறித்து வி.ஏ.ஓ., ரூபாதேவி அளித்த புகாரின் பேரில் விசாரித்து வருகின்றனர்.