ADDED : ஜூலை 08, 2024 05:10 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
சதய நட்சத்திர தினமான நேற்று சிவபெருமானுக்கு உகந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் 51 பதிகங்கள், அதில் உள்ள 658 பாடல்களை ஓதுவார்கள் நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கி மதியம் 2:00 மணி வரை படித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.