ADDED : ஜூலை 30, 2024 06:21 AM
ரிஷிவந்தியம்: எறையூரில் விளைநில கிணற்றில் விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மனைவி ப்ளோரினா சியாமேரி, 42; இவர் நேற்று முன்தினம் காலை 11:30 மணியளவில் விளைநிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டார். அப்போது, தவறி 110 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தார்.
தகவலறிந்த ரிஷிவந்தியம் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று, கிணற்றின் ஆழம் அதிகமாக இருந்ததால் கிரேன் உதவியடன் ப்ளோரினா சியாமேரியை லேசான காயத்துடன் மீட்டனர்.