/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : மார் 14, 2025 07:46 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்களை கலெக்டர் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி 4 பேர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
அரசு சார்பில் மாற்றத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்கள், மாதாந்திர உதவித் தொகை, இலவச பஸ் பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுய தொழில் புரிவோர், கல்வி பயில்பவர், பணிபுரிபவர்களுக்கு இணைப்பு சக்கர பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் 4 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 7 ஆயிரத்து 200 மதிப்பிலான இணைப்பு சக்கர பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.
இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலூர் துணை ஆட்சியர் ஆனந்த்குமார்சிங் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, மூடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.