Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பாதுார் பிரித்தியங்கரா கோவிலில் நிகும்பலா யாகம்

பாதுார் பிரித்தியங்கரா கோவிலில் நிகும்பலா யாகம்

பாதுார் பிரித்தியங்கரா கோவிலில் நிகும்பலா யாகம்

பாதுார் பிரித்தியங்கரா கோவிலில் நிகும்பலா யாகம்

ADDED : ஜூலை 06, 2024 05:31 AM


Google News
Latest Tamil News
உளுந்துார்பேட்டை: பாதுார் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.

அதனையொட்டி நேற்று காலை 10:30 மணியளவில் கோவிலில் அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் பால், தயிர், நெய், பழங்கள் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது.

பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறக் கோரி எழுதிய வெற்றிலையும் சாற்றப்பட்டன. தொடர்ந்து, புடவைகள், வளையல்கள் சாற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீபாராதனை வழிபாடு நடந்தது.

உளுந்துார்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us