ADDED : ஜூலை 07, 2024 04:30 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மொபைல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், துறிஞ்சிப்பட்டை சேர்ந்தவர் சக்கரை மகன் செந்தில்,31; இவர், தனது மனைவியை பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். மேலும், மனைவிக்கு உதவியாக செந்தில் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி செந்தில் வைத்திருந்த மொபைல்போன் காணாமல் போனது. எங்கு தேடியும் கிடைக்காததால் செந்தில் கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விழுப்புரம் மாவட்டம், அரசூரை சேர்ந்த மதிவாணன் மகன் விஜய்,22; என்பவர் செந்திலின் மொபைல்போனை திருடியது தெரிந்தது.
தொடர்ந்து, விஜயை கைது செய்து, அவரிடமிருந்து மொபைல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.