Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மினி சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: 30 பேர் படுகாயம்

மினி சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: 30 பேர் படுகாயம்

மினி சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: 30 பேர் படுகாயம்

மினி சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: 30 பேர் படுகாயம்

ADDED : ஜூன் 16, 2024 06:52 AM


Google News
ரிஷிவந்தியம்: அரியலுார் அருகே மினி சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில், 30 பேர் படுகாயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் வினோத், 20; இவர், மினி சரக்கு வேனில் நேற்று, அதே பகுதியைச் சேர்ந்த 30 பேருடன் வாணாபுரம் அடுத்த சீர்பாதநல்லுாரில் துக்க நிகழ்வில் பங்கேற்க சென்றார்.

வேனை வினோத் ஓட்டிச் சென்றார். காலை 11:00 மணியளவில் அத்தியூர் வனப்பகுதியில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், விபத்தில், கல்பனா, 38; பெரமாத்தா, 50; அருணாசலம், 60; மல்லப்பன், 49; சுகந்தி, 32; சின்னபொண்ணு, 50; பழனியம்மாள், 51; உண்ணாமலை, 40; மல்லிகா, 53; மலர், 37; உட்பட 30 பேரும் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும், கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் 8 மாத பெண் குழந்தையான தமிழரசன் மகள் சுபிஷா டிரைவருக்கு அருகே இருந்ததால் காயமின்றி தப்பியது.

விபத்து குறித்து பகண்டைகூட்ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us