Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உலகளந்த பெருமாள் கோவிலில் மாசி மக தீர்த்த வாரி உற்சவம்

உலகளந்த பெருமாள் கோவிலில் மாசி மக தீர்த்த வாரி உற்சவம்

உலகளந்த பெருமாள் கோவிலில் மாசி மக தீர்த்த வாரி உற்சவம்

உலகளந்த பெருமாள் கோவிலில் மாசி மக தீர்த்த வாரி உற்சவம்

ADDED : மார் 15, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் மாசி மகத்தையொட்டி, நேற்று தீர்த்தவாரி நடந்தது.

அதிகாலை மூலவர் விஸ்வரூப தரிசனம், நித்திய பூஜை, திருப்பாவை சாற்றுமறை நடந்தது. தொடர்ந்து, பெருமாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

பின், சக்கரத்தாழ்வார் புறப்பாடாகி சக்கரதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது.

தொடர்ந்து, கண்ணாடி அறை மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீச பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு தீபாராதனை, நான்காயிர திவ்ய பிரபந்த சேவை நடந்தது. மாலையில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி சன்னதி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us