ADDED : ஜூன் 05, 2024 12:06 AM
மூங்கில்துறைப்பட்டு: புதுப்பட்டில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டில் நேற்று வடப்பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் சசிகுமார் 33, என தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.