Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மது அருந்த அனுமதி கடைக்கு 'சீல்'

மது அருந்த அனுமதி கடைக்கு 'சீல்'

மது அருந்த அனுமதி கடைக்கு 'சீல்'

மது அருந்த அனுமதி கடைக்கு 'சீல்'

ADDED : ஆக 04, 2024 04:34 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மது அருந்த அனுமதி வழங்கிய கடைக்கு கலால் அலுவலர்கள் 'சீல்' வைத்தனர்.

கள்ளக்குறிச்சி ஏமப்பேரைச் சேர்ந்தவர் நடேசன் மனைவி தனலட்சுமி, 55; இவர் கச்சிராயபாளையம் சாலையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். வெளி நபர்கள் தனலட்சுமியின் கடையில் மது அருந்தியுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் கடந்த 1ம் தேதி தனலட்சுமியை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன் மது அருந்த அனுமதி வழங்கிய கடைக்கு நேற்று 'சீல்' வைத்தார்.

சப் இன்ஸ்பெக்டர் கனகவல்லி, வி.ஏ.ஓ., தெய்வீகன், கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us