ADDED : ஆக 04, 2024 04:37 AM

சங்கராபுரம்: புதுபாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் நுாலக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நுாலகர் அனுமந்தன் வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
பட்டதாரி ஆசிரியர் முருகையன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.