/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கூலித் தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை கூலித் தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை
கூலித் தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை
கூலித் தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை
கூலித் தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 02, 2024 11:13 PM
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டையில் கூலித் தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர், நிராமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ஹரிதாஸ், 46; இவர், மணலுார்பேட்டையில் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான மர சிற்பக் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் அவர் வேலை செய்யும் கடையிலேயே துாங்கினார். நேற்று காலை 7:30 மணியளவில் பார்த்தபோது, ஹரிதாஸ் இறந்து கிடந்தது தெரியவந்தது.
அவரது மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.